Saturday, April 02, 2005

சத்யாவைப் பிரிந்து...

நான் மொன்றியல் வந்ததிலிருந்து என்னோடு இருந்த சத்யா வேலை தேடி வான்கூவர் போய்விட்டான். வீட்டில் அவன் இருந்த அறை வெறுமையாக..., கூடவே மனமும் சற்று வெறுமையாக...; வழமையான தொலைக்காட்சியின் சத்தத்தையும் மீறி வீட்டில் ஓர் மயான அமைதி. இவ்வளவு கால வாழ்க்கையில் எத்தனையோ பிரிவுகள் வந்து போனாலும் இன்னும் ஒரு நண்பனின் பிரிவு இப்போதும் பாரமாகத்தான் இருக்கிறது. சத்யா இல்லாத மொன்றியல் பயமாகக்கூட் இருக்கிற்து...!

மீண்டும் மீண்டும்....

இந்தோநேசியா கடற் பரப்பில் மீண்டும் நில நடுக்கம்; சுனாமி அச்சுறுத்தல்; கிழக்கு மாகாணங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு.ஏன் இப்பிடி மீண்டும் மீண்டும் எங்கள் இனத்துக்கே..? இராணுவம் வருகிற்து, குண்டு வீச்சு விமானம் வருகிறது என்று இவர்கள் இடம்பெயர்ந்த நாட்கள் போதாதா? அரசின் அச்சுறுத்தலோடு ஆண்டவனின் அச்சுறுத்தலுமா??